எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 4 நாட்கள் விஜயமாக புதுடெல்லிக்கு பயணம் செய்ய உள்ளார்.
இதற்கமைய நவம்பர் முதல் வாரம் புதுடெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார்.
தம்முடன் வேறு பிரதிநிதிகள் குழுவை அழைத்துச் செல்லாமல் எதிர்க்கட்சித் தலைவர் தனித்து புதுடெல்லி செல்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்போது டெல்லியில் அவர் இந்திய உயர்மட்டக் குழுவை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


